←விருந்து

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிஇளமை

முதுமை→

 

 

 

 

 


439241குடும்பப் பழமொழிகள் — இளமைதியாகி ப. ராமசாமி

 

 


இளமை


உலகம் இளையோருக்காக உள்ளது.  -ஸ்லாவேகியா  
அறிவாளி எவனும் இளமையை விரும்ப மாட்டான்.

 - இங்கிலாந்து  
கழுதையும் இளமையிலே அழகுதான்.  - இந்தியா  
பத்து வயதில் விசித்திரக் குழந்தை, பதினைந்தில் கெட்டிக்கார இளைஞன், இருபதில் சாதாரண மனிதன்.

 -ஜப்பான்  இளைஞன் வேலைக்கு வருகிறான், கிழவன் உணவுக்கு. வருகிறான்.  - துருக்கிஸ்தானம்  புதிதாய்ப் பிறந்த கன்றுகள் புலிகளுக்கு அஞ்சமாட்டா. - சீனா 
இளங் கன்று பயமறியாது.  - தமிழ் நாடு  வாலிபம் என்பது பைத்தியம்.
 -கீழ் நாடுகள்  
கூர்மையான முள் இளமையிலிருந்தே அப்படி யிருப்பது.

 -ஆப்கானிஸ்தானம்  
இளைஞர்களைக் கேட்டுப் பாருங்கள்: அவர்களுக்கு எல்லாம் தெரியும்!  -ஃபிரான்ஸ்  
இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்காரர்கள்.

 -ஜெர்மனி  
இளமையில் ரோஜா மலர்களின் மீது படுத்திருந்தால், முதுமையில் நீ முட்களின்மீது படுத்திருப்பாய்.

 - இங்கிலாந்து  
வாலிபத்திற்கு அடிக்கடி தோல் உரிந்து, புதுத் தோல் உண்டாகும்.  -அயர்லந்து  
வாலிபத்தைப் பாராட்டிப் பேசினால், அது மேன்மையடையும்.  -( , , ) 
மென்மையான களியை எந்த உருவமாகவும் பிடிக்கலாம்.  -லத்தீன்  
இளமையில் முகம் அழகு, முதுமையில் ஆன்மா அழகு.

 -சுவீடன்  
இளைஞர்கள் கூட்டமாய்ச் செல்வார்கள், நடுவயதினர்
ஜோடியாகச் செல்வர், வயோதிகர் தனியாகச் செல்வர்.

 -( , , )  
ஒருவர் இளமையா யிருத்தல் ஒரு சமயம்தான். -  -ஃபிரான்ஸ்  
வாலிபம் இடைவிடாத ஒரு வெறி, அது அறிவின்காய்ச்சல்.  -( , , ) 
மது இல்லாமலே வெறி கொள்வது வாலிபம்.  -கதே  வாலிபப் பருவத்தை அநுபவிக்க வேண்டும்.  -கிரீஸ்  
அடங்காமல் துள்ளும் குட்டிகளே பின்னால்சிறந்த குதிரைகளாக ஆகின்றன.  -( , , ) 
தெய்வங்களுக்குப் பிரீதியானவர்கள் இளமையிலே இறக்கிறார்கள்.  -( , , ) 
வாலிபம் துக்கத்துடன் தொடர்பு கொள்வதில்லை.

 - அரிஸ்டாட்டல்  
குஞ்சுகளே வாத்துக்களைப் புல்வெளிக்கு அழைத்துச் செல்கின்றன.  - இதாலி  
வாலிபம் பறந்து செல்கின்றது.  -லத்தீன்  காலை நேரம் இருக்கும் பொழுதே, மலர்களைப் பறியுங்கள்.  -( , , ) 
பெருமையுள்ள செயல்கள் அனைத்தும் அநேகமாக இளைஞர்களாலேயே செய்யப் பெற்றிருக்கின்றன.  -டிஸ்ரேலி  
இறைவன் (படைத்த) ஆட்டுக் குட்டிகள் துள்ளி விளையாடும்.  - இங்கிலாந்து  
வாலிபத்தில் கவனமின்றித் துள்ளினால், வயது காலத்தில் வருந்தவேண்டும்.  -( , , ) 
இளமையைத்தான் அடக்கிக கொண்டு வரவேண்டும்,

முதுமை தானே தன்னை அடக்கிக் கொள்ளும்.  -( , , )  
இளமையான தோள்களில் முதுமையான தலைகளை வைக்க முடியாது.  -( , , ) 
வாலிபத்திலும் வெள்ளைத் தாளிலும் எதை எழுதினாலும் பதிந்து விடும்.  -( , , ) 
வாலிபம் நம்பிக்கைக் குரிய பருவம்.  -( , , )  
வயோதிகர் குளிர்காய்ந்து கொண்டிருக்கையில், வாலிபர்கள் நடனமாடுவார்கள்.  -( , , )   

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel